Friday, April 30, 2010

இந்த சலுகை ஏன் நித்தியானந்தாவுக்கு மட்டும் ?

நான் ஆண் அல்ல என்று தன்னை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் அளித்தாராம்.. உடனே அவரை பெண்கள் சிறையில் அடைச்சிட்டாங்களாம்.தாங்க முடியலடா சாமி ..

ஆமா எனக்கு ஒரு சந்தேகம்.. சிறையில் இருக்கும் நித்தியானந்தாவுக்கும் , கற்பழிப்பு குற்றம் செஞ்சு ஜெயிலுக்கு போனவனுக்கும் என்ன வித்தியாசம்..ஒருத்தன் எல்லாரையும் கற்பழிச்சிட்டு போலீசுகிட்ட மாட்டினா உடனே தான் ஒரு ஆம்பள இல்லைன்னு சொன்னா உடனே அவனை பெண்கள் சிறையில் அடைச்சுருவாங்களா ?

அட ஒரு வேளை அவன் ஆம்பளையா இல்லைன்ன சரி.. ஆனா ஒரு வேளை அவன் ஆம்பளைன்னா என்ன செய்வாங்க ? அவனோட மருத்துவ பரிசோதனை முடிவு தெரியும் வரை அவனை பெண்கள் சிறையில் வைத்திருந்தால் அவன் அங்கே இருக்கும் பெண்க்களை கற்பழிக்க மாட்டாண்ணு என்ன நிச்சயம் ?

சாதாரணா ரவுடியா இருந்தா கூட பரவாயில்லை கற்பழிச்சுட்டு போயிருவான்..அதோட முடின்ச்சுது.. ஆனா இந்த நித்தியானந்தா ஒப்பந்தம் போட்டு இல்ல் கற்பழிப்பான்.. "ஆன்மா விடுதலை பெற நிர்வாணமும் , உடலுறவும் முக்கியம்ணு எழுதி வாங்கி கற்பழிச்சவன் சிறையில் இருப்பவர்களிடம் "சிறையில் இருந்து விடுதலை பெற அதே நிர்வாணமும் , உடலுறவும் முக்கியம்ணு எழுதி வாங்கி கற்பழிக்க மாட்டான்னு என்ன நிச்சயம்.

அதெல்லாம் சரி.. அந்த பெண்கள் சிறையில் இருப்பவர்களுக்கு இவன் அங்கே இருப்பதால் வடிவேலு சொன்ன மாதிரி "சங்கடமா இருக்காது?".. சிறையில் இருந்தாலும் சிலருக்காவது மானம் , வெட்க்கம் இல்லாமலா போயிருக்கும் ?

அவன் ஆம்பளையா இல்லையான்னு பாக்குறது எப்படின்னு ஒரு நிமிஷத்துலெ கண்டு பிடிக்க ரெண்டு வயசான குழந்தைக்கே தெரியும்... அப்படி இருக்க , அவனுக்கு மருத்துவ பரிசோதனை செஞ்சு முடிவு தெரியற வரைக்கும் அவனை பெண்கள் சிறையில் அடைக்கலாமா ? அவன் பெண்கள் சிறையிலேயே ஒரு ஞான பீட கிளை ஆரம்பிக்கிர வரைக்கும் அவனை அங்கேயே வச்சிருக்க போறாங்களா ?

அவன் தன்னை தண்டனையிலிருந்து தப்பிக்க கண்டு பிடிசச ஒரு வழி தான் இது.. இதை கூட தெரிஞ்சிக்காம அவன் சொல்லுறதை எல்லாம் எப்படி இந்தா போலீசுக்காரங்க நம்புராங்க ?

எனக்கு என்னமே அவன் மேலும் மேலும் தப்பு செய்ய இந்த காவல் துறையும் துணை போகுதோன்னு தோணுது..அவனுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை ? அதன் ரகசியம் தான் என்ன ?

மேல இருந்தா அது நெஞ்சு , கீழ இருந்தா அது ..ஞ்சுன்னு முடிவு பண்ணுறத விட்டுட்டு , பெருச்சாளிய உள்ளே வச்சு கட்டு சோத்த கட்டுன கதையால்ல இருக்கு..

நல்ல வேளை.. அது காலியான் சிறையாம்..

Saturday, April 10, 2010

இது யாரும் சொல்லாத கதை

கி பி 1967 , நம்ம தமிழ் நாடு , தனி தமிழ் மாநிலமாக உருவான ஆண்டு...
அந்த தமிழ் நாட்டிலே பேரு வைக்காத ஒரு பசுமையான கிராமம் , அது தாங்க நம்ம பாரதிராஜா காமிரா open பண்ணினா வருமே அதே கிராமம்.அந்த கிராமத்தில ஒரு அழகான ஜோடி வாழ்ந்து வந்தாங்க .. அந்த நாயகன் ராணுவத்துல வேலை பாத்து கிட்டு இருந்தாரு.. வருசத்துக்கு ஒரு தடவை தான் ஊருக்கு வருவாரு நம்ம கதாநாயகன்..

ஊருக்கு வரும்போது நம்ம நாயகன் , தன்னோட அருமை மனைவிக்கு பரிசுகள் , நண்பர்களுக்கு மிலிடரி சரக்கு எல்லாமே வாங்கிட்டு தான் வருவாரு .. அவரு ஊருல இருக்குற நாட்கள் , ஊரே திருவிழா கோலம் பூத்திருக்கும் ..கையில் இருக்கும் காசு கரையும் வரை நண்பர்களுக்கு குறை இருக்காது.நம்ம நாயகனுக்கு காசை சேத்து வைக்க தெரியாது.. இதை வைத்தே வீட்டில் தினமும் சண்டை நடக்கும் ரெண்டு பேருக்கும்.

நம்ம் நாயகியும் எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை..அவளும் அவளுக்கு தேவையான எல்லா பொருட்களும் , எவ்வளவு காசாக இருந்தாலும் வாங்கி கொள்வாள்.முக்கியமாக அவளுக்கு தேவையான அழகு சாதனங்கள் வாங்கி வீட்டையே நிரப்பி விடுவாள்.தன்னால் முடியா விட்டாலும் , தகுதியை மீறி கடன உடன வாங்கியாவது ஆடம்படர சாதனங்களையும், அழகு சாதனங்களையும் வாங்கியே பெரும் கடனாளி ஆக ஆக்கி விட்டாள் நம்ம நாயகி.. ஆனா புருசன் தண்ணிக்காக நண்பர்களுக்கு செல்வு செய்தா மட்டும் ரொம்ப கோப படுவாள்.

கி பி, 1971 டிசெம்பர் மாதம்...

இந்தியாவுக்கும் , பாகிஸ்தானுக்கும் போர் மேகம் சூழ்ந்திருந்த நேரம்... போர் எப்போ வேணும்னாலும் வரலாம்.. ரெண்டு நாட்டு மக்களும் ஒரு வித பீதியிலேயே நாட்களை கடத்திக் கொண்டிருந்தனர்..

நம்ம நாயகன் விடுமுறை முடியவே இல்லை. அதற்குள்ளாகவே ராணுவ பணி இடத்திலிருந்து அவசர தந்தி வந்ததால் மனைவி மற்றும் நண்பர்களிடமிருந்து பிரியா விடை பெற்று அவசர அவசரமாக ரயில் பிடித்து இந்திய எல்லையை நோக்கி சென்றான் தன் தாய் மண்ணை காப்பதற்க்காக..

எல்லையில் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது..இரு நாட்டிலும் ஏகப்பட்ட உயிரிளப்புகளும், உடமை இளப்புகளுமாக போர் ரொம்ப கருவிக்ள் தன்னுடய திறமைகளல் கோர முகத்தை காட்டி கொண்டிருந்தது..

அந்த கொடிய தோட்டா ஒன்று நம்முடைய நாயகனை பதம் பார்த்து விட , அவன் நிலை குலைந்து மண்ணில் வீழ்ந்து விட்டான்.. அந்த தருவாயிலும் நம்மால் சொந்த நாட்டை காப்பாற்ற் முடிய வில்லயேன்னு கண்ணீர் விட்டு கொண்டிருந்த அவனுக்கு , அருமை மனைவியின் உருவமும் அவன் கண் முன்னே தோன்ற , எப்படியாவது எழுந்திருக்க முயர்ச்சி செய்தான்.. ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை இந்த உலகத்துக்கு விடை கொடுப்பதை தவிர ...

வீட்டில் முன் வாசலில் தபால் காரன் தந்தியுடன் நிர்ப்பதை பார்த்த உடனே அவளுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதை ஊகித்து விட்டாள்.. தபால் காரன் தந்தியை படிக்க ஆரம்பிப்பதற்குள்ளே அவள் சுய நினவை இழந்து கீழே விழுந்தாள்..இந்த செய்தியை கேட்ட உடனே அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி விட அவளுக்கு ஆறுதல் சொல்ல ஊரே வீட்டின் முன் கூடி விட்டது.ஒரு வாரம் கழித்து கணவனின் சடலமும் வந்து சேர்ந்தது..

எல்லாம் சடங்குகளும் முடிந்து உறவுக்காரர்களும், ஊர்காரர்களும் அவரவர் வேலையை பார்க்க போய் விட்டார்கள்..அவள் மட்டுமே தனியே அழுது கொண்டிருந்தாள்..தான் தனிமை பட்டு விட்டதை உணர்ந்தாள்.. எதிர்காலம எப்படி இருக்கும் என்று தெரிய வில்லை.. கையில் காசும் இல்லை.. ஊர் முழுக்க வாங்கி போட்ட கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் தடுமாறினாள்.. இருந்த கொஞ்சம் காசை வைத்து நாட்களை ஓட்டினாள்.. உறவினர்கள் யாரும் எந்த உதவியும் செய்ய வில்லை. அவளால் அவர்களிடம் பண உதவி கேட்க தன்மானம் இடம் கொடுக்க வில்லை. கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தார்கள்.. இருந்த ஒரே வீட்டை விற்று கடனை அடைத்து விட்டு ஊருக்கு வெளியே ஒரு குடிசை கட்டி அதில் குடியேறினாள்.

கையில் இருந்த சாதனங்களை எல்லாம் விற்று நாட்களை ஓட்ட தொடங்கினாள். உதவி செய்யவும் யாரும் இல்லை, குழந்தையும் இல்லை.. யாருக்காக வாழ வேண்டும் என்று தனிமையில் ஏங்கினாள். நாட்கள் உருண்டோடியது.. நாட்கள் மாதங்களாகின, மாதங்கள் வருடமாகின.. வருடங்கள் போக போக வறுமையின் உக்கிரமும் கூடி கொண்டே சென்றது..அவளும் கிழவியாகினாள்.

சரி , ஏதாவது தொழில் செய்தோ, பலகாரம் விற்றோ பிழைக்கலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.. இறுதியாக வடை சுட்டு பிழைக்கலாம் என்று நினைத்து கையில் வைத்திருந்த கொஞ்சம் காசை வைத்து வடை சட்டி, எண்ணை , கடலை பருப்பு மற்றும் தேவையான சாதனங்களை வாங்கினாள்..தனது குடிசை பக்கத்திலேயே அதற்கான ஒரு மரத்தடி நிழலையும் தேர்வு செய்து ஒரு நல்ல நாளை பார்த்து தனது தொழிலை ஆரம்பித்தாள்.

பய பக்தியுடன் வடை சுட ஆரம்பித்தாள்.. வடையும் சுட்டு முடிச்சிட்டு அதை விற்பதற்காக ஒரு பாத்திரத்தில் அடுக்கி கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஒரு வடையை ஒரு காக்கா தூக்கி கொண்டு ஓடி விட்டது.. கொஞசம் தூரம் வடையை வாயில் கவ்வி கொண்டு ஓடிய காக்கா ஒரு மரத்தில் போய் அமர்ந்தது. அந்த நேரம் பார்த்து அந்த வழியாக வந்த காக்காவின் நண்பனான ஒரு திருட்டு நரி அதை பார்த்து விட , எப்படியாவது அந்த காக்காவிடம் இருந்து அந்த வடையை பறிக்க ஆசை பட்டு ரூம் போட்டு யோசித்து கொண்டிருக்க ஒரு ஐடியா கிடைத்து விட நரிக்கு ஒரே சந்தோசம்.. அப்புறம் காக்காவை பார்த்து "காக்கா காக்கா உன்னோட பாட்டு கேட்டு ரொம்ப நாட்கள் ஆகி விட்டது.. எனக்கு நீ புதிதாக வந்த காக்க காக்க படத்தில் வரும் ஒ மகசீயா பாட்டு பாடேன் என்று கேட்க இன்னுமாட நம்மள இந்த ஊரு நம்பிக்கிட்டுருக்கு அப்படின்னு நினச்சு ஒ மகசீய அப்படின்னு ஆரம்பிக்க வடை கீழே விழுந்தது. அதை எதிர்பாத்த நரி வடையை எடுத்து விட்டு ஒடியதை கூட பார்க்கமல எல்லா வரியையும் பாடி முடிச்ச பிறகே தன் பாட்டை நிருத்தி விட்டு கீழே பார்க்க அங்கே நரியும் இல்லை , வாயில் இருந்த வடையும் இல்லை..அப்புறம் அந்த காக்கா சொல்லிச்சாம்..

"வடை போச்சே!"

Thursday, April 8, 2010

இஸ்லாமிய சட்டங்களை அவமதித்த சானியா & சோய்ப் மாலிக்

எப்படியோ ஒரு அசிங்கமான தொடர் கதை ஒன்று முடிவுக்கு வந்து விட்டது.

இஸ்லாமிய சமுதாயத்தையும் , இஸ்லாமிய மக்களயும் அசைத்து பார்த்த ஆயிஷா சித்திகி ,சானியா & சோய்ப் மாலிக் சம்பந்த பட்ட ஒரு அசிங்கமான தொடர் கதை ஒண்ணு முடின்சிடிச்சுப்பா

இது வரை ஆயிஷா பற்றி சோயிப் சொன்ன கதைகள் எந்த அளவுக்கு உண்மை என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

உண்மையிலயே ஆயிஷா வேரு ஒரு பெண்ணின் படத்தை காட்டி ஏமாற்றினாளா ? அந்த அளவுக்கு ஒரு நாட்டின் கிரிகெட் கேப்டன் முட்டாளாக இருப்பாரா ?


இதை பற்றி ஒரு மூத்த இஸ்லாமிய பெரியவர் சொன்னார் இப்படி. " இந்த சம்பவத்தில் யாருமே வெற்றி பெறவும் இல்லை ஆனால் தன்னை ஏமாற்ற பயன் படுத்திய ஊர் பேர் தெரியாத அந்த பெண்ணின் புகைபடத்தை வெளியிடாத சோயிப் மாலிக்கை பாராட்டியே தீர வேண்டும்."

எட்டு வருசத்துக்கு முன்னால் "Telephonic Romance" ஆரம்பித்த போது இந்த படத்தை காட்டி தான் ஏமாற்ற பட்டதாக சோயிப் மாலிக் கூறி இருக்கிறார்.அந்த படத்தை பார்த்து தான் ஆயிஷா மீது காதல் வயப்பட்டாராம்.


இவ்வளவு வருடமாக அந்த படத்தில் இருந்த அழகான பெண்ணை தான் காதலிப்பதாக சோயிப் நினைத்து கொண்டு கனவுலகத்தில் மிதந்திருக்கிறார்.அதனாலேயெ அந்த அழகான பெண்ணுடன் தொலை பேசி மூலம் "நிக்காஹ்" முடுச்சிட்டாராம்.

அந்த புகை படத்தை தான் பார்த்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு அரசியல் வாதியும் சொல்லி இருக்கிறார்.படத்தில் இருக்கும் அந்த பெண் ரொம்ப அழகாக இருந்ததாகவும், இப்போது அவளுக்கு கல்யாணம் முடிந்து சந்தோசமாக இருகிறாள் என்றும் அவளை இந்த பிரச்சினையில் தேவை இல்லாமல் இழுக்க வேண்டாம்,அவளை பத்தி வேரு ஒன்றும் கேக்காதீஙக , அவளை விட்டுடுங்க என்றும் ,இவ்வளவு நடந்த பிறகும் அந்த படத்தை வெளியிடாத சோயிபுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார் அந்த அரசியல்வாதி.

இந்த முக்கோண காதல் கதை ஏகப்ப்ட்ட குழப்பத்தையும், சந்தேகங்களையும் கிளப்பி விட்டிருக்கிறது.

சானியா மிர்சா ஒரு பிரபலமான டென்னிஸ் வீராங்கணை மற்றும் கிர்க்கெட்டை தவிர வேறு ஒன்றும் தெரியாத மக்களுக்கு டென்னிசை பத்தி தெரிய வைத்து இந்தியாவிற்க்கே நம்பிக்கை நட்சசத்திரமாக இருப்பதால் அவருடைய ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு இந்தியனின் வீட்டிலும் அலசப்படுகிற விசயமாக இருக்கிறது.

உண்மயை சொல்ல வேண்டும் என்றால் , சானியா மிர்சா சோயிப் மாலிக்குடனான திருமணத்தை அறிவித்த போது நம்மில் பெரும்பாலோனாவர்களுக்கு ஒரு வித பொறாமை ஏற்பட்டிருக்கும்.மேலும் அந்த அளவிற்க்கு இந்தியாவில் ஒரு முஸ்லிம் பையனக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விட்டதா என்று நினைத்து ஒரு வித சோர்வும் ஏற்பட்டிருக்கும்.

ஆனால் சோயிப் மற்றும் ஆயிஷாவின் இந்த தொலைபேசி நிக்காஹ் விவகாரம் வெளி உலகத்திற்க்கு தெரிந்த பிறகு , இதனால் இஸ்லாமிய சட்டங்களுக்கு நேர்ந்த அவமானத்தை பார்த்து ஒவ்வொரு இஸ்லாமியனும் வேதனை அடைந்து இருப்பான் என்பது நிச்சயம்..தொலை பேசியிலே ஒரு திருமணத்தை நடத்தி வைக்க முடியுமா என்று அடுததவர்கள் கேக்கும்போது என்ன பதில் சொல்வது ?

All India Muslim Personal Law Board உறுப்பினரான Kamal Farooqui சொல்லுறாரு இப்படி.

"இந்த மொத்த கதையில் வந்த மூணு பேருமே சுத்தமானவங்க இல்லை..நாட்டில் மிகவும் பிரபலமான சானியா போன்றவர்கள் அடுத்தவர்களுக்கு இதை ஒரு எடுத்து காட்டாக காட்டும் நிலைக்கு தள்ளி இருக்க கூடாது..அவர் எதை செய்தாலும் அது நல்லதோ , கெட்டடதோ , அது ஒரு மிகப் பெரிய தாக்கத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும்..அவர் மீது ஒவ்வொரு இந்தியனும் மிகப் பெரிய நம்பிக்கையை வைத்து இருக்கிரார்கள். இப்போ அவர் துபாய் போய் குடியமர போவதாக சொல்லி இருக்கிறர். எப்படி அவரால் இதை செய்ய மனசு வரும். சோயிப் விளையாடும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் நடக்கும் போது யாருக்கு அவர் ஆதரவளிப்ப்பார்..இதை அவருடைய சொந்த விசயமென்று யாராவது சொல்லலாம்.. ஆனால் இஸ்லாத்தையும், மற்றும் பல விசயங்களையும் அவருடைய சொந்த விசயஙளுக்காக ஏன் இழுக்க வேண்டும் ?."

இந்த பிந்தைய திருமண விசயத்தை கோர்ட்க்கு வெளியே இப்போது செய்தது போல் முடிக்க வேண்டும் என்று சோயிப் நினைத்திருந்தால் சானியாவுடனான திருமணத்தை அறிவிப்பதற்க்கு முன்னாலேயே இதை செய்திருக்க வேண்டும்.எதற்க்காக இந்த புனிதமான இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு ஒரு கெட்ட் பெயர் ஏற்படுத்தி விட வேண்டும்?..

இஸ்லாமிய சட்ட படி , ஒருவர் திருமணம் செய்து கொள்ளப் போறவரை நேரில் பர்க்காமல் இருவருடைய அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொள்வதை தடுக்கிறது.

மேலும் இது வரை அமைதியாக இருந்து விட்டு இப்போது ஆயிஷா இந்த விசயத்தை கிளப்ப என்ன காரணம் ?. இது வரை அவர் என்ன செய்து கொண்டிருந்தார் ?.

ஆக மொத்ததில் இந்த அசிங்க நாடகத்தில் வந்த மூன்று பேருமே சுத்தமானவர்கள் அல்ல்.. இந்த நாடகத்தை ஒரு தொலை காட்சி தொடர் போல பார்த்து அடுத்து என்ன திருப்பு முனை நடக்குமோ என்று தொலை காட்சி முன் தவம் கிடக்கும் நாமும் தான்..

Friday, April 2, 2010

இன்றைய மெகா சீரியல் எங்கே போய் கொண்டு இருக்கிறது

முறைப்பாடு , பில்லி சூனியம் , மூட நம்பிக்கை , கலாசார சீர்கேடு, கள்ள காதல்கள், குடும்ப சதி , பொறாமை இவைகளின் கூட்டு கலவையாக இன்றைய மெகா சீரியல்கள் போய் கொண்டு இருகின்றன.

வீட்டின் வரவேற்பறையில் குடும்பத்துடன் பார்க்க கூடிய அளவில் எந்த TV நிகழ்ச்சிகளுமே இல்லையே என்று ஏங்கும் அளவிற்கு தான் இன்றைய டிவிக்கள் மற்றும் அதன் நிகழ்ச்சிகள் .

பொதுவாக எந்த சீரியலுமே பாக்காத குடும்பஸ்தர்கள் எப்படியோ அந்த கருமங்களை பார்க்க கூடிய சூழ்நிலைக்கு தள்ள படுகிறார்கள். உபயம் : மனைவி .மற்றும் குடும்பம் ..

அப்படி தான் நானும் , நீங்களும் அந்த கன்றாவி சீரியல்களை பார்க்க வேண்டி இருக்கிறது .. பகல் முழுதும் சீரியல் , அத்துடன் நிறுத்தி கொண்டாலும் பரவாய் இல்லை .. நாம் பார்க்கும் நிலைமை இருக்காது .. ஆனால் பொழுது சாய்ந்தும் தீராத அந்த சீரியல்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது ...

அப்படி தான் நான் மாட்டி கொண்டு , SUN டிவி யில் செல்லமே பார்க்கும் பொன்னான (?) வாய்ப்பு எனக்கு கிடைத்தது ...

அதில் முறைப்பாடு அப்படின்னு ஒன்னு வைக்கிறாங்க நம்ம செல்லம்மாவோட அண்ணன் பொண்டாட்டி (அவங்க தாங்க நம்ம பழைய அண்ணி )...ஒரு சேவல் கோழிய சிலை முன் இருக்கும் அந்த சூலாயிதத்தில் குத்தி வச்சுடாங்க .. அப்படி குத்தி வச்சிட்டா அந்த ரெண்டு குடும்பமும் பிரிஞ்சி அவங்களுக்குள்ளே எந்த ஒட்டு , உறவும் இருக்க கூடாது ... அப்படி இருந்துட்ட சாமி குத்தம் ஆகி , யாருக்காவது ஏதாவது ஆகிடுமாம் ..

அப்படி முறைப்பாடு பண்ணிட்டதால நம்ம செல்லம்மா சொந்த வீட்ட விட்டு பிரிஞ்சு கான்டீன் நடத்துறாங்க .. அவங்க அப்பா அவங்க வீட்டுக்கு வந்தப்போ , நெஞ்சி வலி எடுத்து வலியிலே துடிச்ச பிறகும் அவங்க வீட்டுல இருந்து தண்ணி கொடுக்காம , பக்கத்துக்கு வீடுலேயிருந்து தண்ணி வாங்கி கொடுத்தாங்க ..

அப்படி முறைப்பாடு ங்கிற மூட பழக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து போய் கொண்டு இருகிறது அந்த செல்லமே தொடர்..

அது அப்படி இருக்க , வீட்டின் வரவேற்பறையில் இருந்து சைடு டிஷ் , பெப்சி சகிதம் வச்சி தண்ணி அடிச்சி கொண்டு இருக்கிறாள் இன்னொருத்தி .. கேட்டால் ஆம்பழைங்க செய்றது எல்லாமே அவங்க செய்வாங்களாம் .. இந்த கொடுமைகளை எங்கே போய் சொல்லுவது ..

இந்த சீரியல்களை பார்க்கும் எந்த குடும்ப பெண்களும் , அவர்களை போல மூட நம்பிக்கைகளுக்கும் , அடுத்தவன் புருஷனை அபகரிக்கும் எண்ணம் கொண்டவர்களாகவும் , தனக்கு வேண்டாதவர்களை எப்படி எல்லாம் சதி திட்டம் தீட்டலாம் என்றும் tution எடுக்காத குறையாக எல்லாத்தையும் செய்முறை விளக்கங்களுடன் காட்டும் இந்த சீரியல்களுக்கு அடிமையாக மாற மாட்டார்கள் ன்னு என்ன நிச்சயம் ..

இந்த டிவி க்களுக்கும் சென்சர் கட்டுபாடு மிகவும் தேவை படிகிற ஒன்று ..


நாம் முதலில் செய்ய வேண்டியது இந்த மெகா தொடர் டிவி சானல்களை கட் பண்ணி விடுவதுதான் (குடும்ப தலைவன் என்கிற அதிகாரம் இருந்தால்)

இன்னைக்கி தான் கம்பெனி ஆரம்பிச்சுருக்கேன்

இன்னைக்கி தான் கம்பெனி ஆரம்பிச்சுருக்கேன் .. அது நால இன்னைக்கு கம்பெனி லீவு ...நாளைக்கு வாங்க ..

போங்கப்பு போய் புள்ளைங்கள படிக்க வையுங்க