Thursday, April 8, 2010

இஸ்லாமிய சட்டங்களை அவமதித்த சானியா & சோய்ப் மாலிக்

எப்படியோ ஒரு அசிங்கமான தொடர் கதை ஒன்று முடிவுக்கு வந்து விட்டது.

இஸ்லாமிய சமுதாயத்தையும் , இஸ்லாமிய மக்களயும் அசைத்து பார்த்த ஆயிஷா சித்திகி ,சானியா & சோய்ப் மாலிக் சம்பந்த பட்ட ஒரு அசிங்கமான தொடர் கதை ஒண்ணு முடின்சிடிச்சுப்பா

இது வரை ஆயிஷா பற்றி சோயிப் சொன்ன கதைகள் எந்த அளவுக்கு உண்மை என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

உண்மையிலயே ஆயிஷா வேரு ஒரு பெண்ணின் படத்தை காட்டி ஏமாற்றினாளா ? அந்த அளவுக்கு ஒரு நாட்டின் கிரிகெட் கேப்டன் முட்டாளாக இருப்பாரா ?


இதை பற்றி ஒரு மூத்த இஸ்லாமிய பெரியவர் சொன்னார் இப்படி. " இந்த சம்பவத்தில் யாருமே வெற்றி பெறவும் இல்லை ஆனால் தன்னை ஏமாற்ற பயன் படுத்திய ஊர் பேர் தெரியாத அந்த பெண்ணின் புகைபடத்தை வெளியிடாத சோயிப் மாலிக்கை பாராட்டியே தீர வேண்டும்."

எட்டு வருசத்துக்கு முன்னால் "Telephonic Romance" ஆரம்பித்த போது இந்த படத்தை காட்டி தான் ஏமாற்ற பட்டதாக சோயிப் மாலிக் கூறி இருக்கிறார்.அந்த படத்தை பார்த்து தான் ஆயிஷா மீது காதல் வயப்பட்டாராம்.


இவ்வளவு வருடமாக அந்த படத்தில் இருந்த அழகான பெண்ணை தான் காதலிப்பதாக சோயிப் நினைத்து கொண்டு கனவுலகத்தில் மிதந்திருக்கிறார்.அதனாலேயெ அந்த அழகான பெண்ணுடன் தொலை பேசி மூலம் "நிக்காஹ்" முடுச்சிட்டாராம்.

அந்த புகை படத்தை தான் பார்த்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு அரசியல் வாதியும் சொல்லி இருக்கிறார்.படத்தில் இருக்கும் அந்த பெண் ரொம்ப அழகாக இருந்ததாகவும், இப்போது அவளுக்கு கல்யாணம் முடிந்து சந்தோசமாக இருகிறாள் என்றும் அவளை இந்த பிரச்சினையில் தேவை இல்லாமல் இழுக்க வேண்டாம்,அவளை பத்தி வேரு ஒன்றும் கேக்காதீஙக , அவளை விட்டுடுங்க என்றும் ,இவ்வளவு நடந்த பிறகும் அந்த படத்தை வெளியிடாத சோயிபுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார் அந்த அரசியல்வாதி.

இந்த முக்கோண காதல் கதை ஏகப்ப்ட்ட குழப்பத்தையும், சந்தேகங்களையும் கிளப்பி விட்டிருக்கிறது.

சானியா மிர்சா ஒரு பிரபலமான டென்னிஸ் வீராங்கணை மற்றும் கிர்க்கெட்டை தவிர வேறு ஒன்றும் தெரியாத மக்களுக்கு டென்னிசை பத்தி தெரிய வைத்து இந்தியாவிற்க்கே நம்பிக்கை நட்சசத்திரமாக இருப்பதால் அவருடைய ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு இந்தியனின் வீட்டிலும் அலசப்படுகிற விசயமாக இருக்கிறது.

உண்மயை சொல்ல வேண்டும் என்றால் , சானியா மிர்சா சோயிப் மாலிக்குடனான திருமணத்தை அறிவித்த போது நம்மில் பெரும்பாலோனாவர்களுக்கு ஒரு வித பொறாமை ஏற்பட்டிருக்கும்.மேலும் அந்த அளவிற்க்கு இந்தியாவில் ஒரு முஸ்லிம் பையனக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விட்டதா என்று நினைத்து ஒரு வித சோர்வும் ஏற்பட்டிருக்கும்.

ஆனால் சோயிப் மற்றும் ஆயிஷாவின் இந்த தொலைபேசி நிக்காஹ் விவகாரம் வெளி உலகத்திற்க்கு தெரிந்த பிறகு , இதனால் இஸ்லாமிய சட்டங்களுக்கு நேர்ந்த அவமானத்தை பார்த்து ஒவ்வொரு இஸ்லாமியனும் வேதனை அடைந்து இருப்பான் என்பது நிச்சயம்..தொலை பேசியிலே ஒரு திருமணத்தை நடத்தி வைக்க முடியுமா என்று அடுததவர்கள் கேக்கும்போது என்ன பதில் சொல்வது ?

All India Muslim Personal Law Board உறுப்பினரான Kamal Farooqui சொல்லுறாரு இப்படி.

"இந்த மொத்த கதையில் வந்த மூணு பேருமே சுத்தமானவங்க இல்லை..நாட்டில் மிகவும் பிரபலமான சானியா போன்றவர்கள் அடுத்தவர்களுக்கு இதை ஒரு எடுத்து காட்டாக காட்டும் நிலைக்கு தள்ளி இருக்க கூடாது..அவர் எதை செய்தாலும் அது நல்லதோ , கெட்டடதோ , அது ஒரு மிகப் பெரிய தாக்கத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும்..அவர் மீது ஒவ்வொரு இந்தியனும் மிகப் பெரிய நம்பிக்கையை வைத்து இருக்கிரார்கள். இப்போ அவர் துபாய் போய் குடியமர போவதாக சொல்லி இருக்கிறர். எப்படி அவரால் இதை செய்ய மனசு வரும். சோயிப் விளையாடும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் நடக்கும் போது யாருக்கு அவர் ஆதரவளிப்ப்பார்..இதை அவருடைய சொந்த விசயமென்று யாராவது சொல்லலாம்.. ஆனால் இஸ்லாத்தையும், மற்றும் பல விசயங்களையும் அவருடைய சொந்த விசயஙளுக்காக ஏன் இழுக்க வேண்டும் ?."

இந்த பிந்தைய திருமண விசயத்தை கோர்ட்க்கு வெளியே இப்போது செய்தது போல் முடிக்க வேண்டும் என்று சோயிப் நினைத்திருந்தால் சானியாவுடனான திருமணத்தை அறிவிப்பதற்க்கு முன்னாலேயே இதை செய்திருக்க வேண்டும்.எதற்க்காக இந்த புனிதமான இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு ஒரு கெட்ட் பெயர் ஏற்படுத்தி விட வேண்டும்?..

இஸ்லாமிய சட்ட படி , ஒருவர் திருமணம் செய்து கொள்ளப் போறவரை நேரில் பர்க்காமல் இருவருடைய அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொள்வதை தடுக்கிறது.

மேலும் இது வரை அமைதியாக இருந்து விட்டு இப்போது ஆயிஷா இந்த விசயத்தை கிளப்ப என்ன காரணம் ?. இது வரை அவர் என்ன செய்து கொண்டிருந்தார் ?.

ஆக மொத்ததில் இந்த அசிங்க நாடகத்தில் வந்த மூன்று பேருமே சுத்தமானவர்கள் அல்ல்.. இந்த நாடகத்தை ஒரு தொலை காட்சி தொடர் போல பார்த்து அடுத்து என்ன திருப்பு முனை நடக்குமோ என்று தொலை காட்சி முன் தவம் கிடக்கும் நாமும் தான்..