Sunday, April 17, 2011

ரஜினிகாந்துக்கு வண்டு முருகன் கண்டனம்

தான் நடிக்கிற படத்தோட ஸ்டில்ஸ்  வெளியே வரக்கூடாது என்பதற்காக சூட்டிங் நடக்குற எடத்துல கேமரா போனையே நீங்களும், உங்க டைரக்டரும் அனுமதிக்கிறது இல்லை. இதுல எவ்வளவு கவனமா இருக்கிற நீங்க ஒட்டு போடும் போது மட்டும் ஏன் சார் கண்ட கண்ட ***** எல்லாம் போட்டோ எடுக்க உடுறீங்க.. நோகாம நொங்கு திங்கிற நீங்க உங்க படம் வெளியே வந்து கோடி கோடியா சம்பாதிக்கணும்னு நீங்க ஆசை படும்போது , கோடியா கோடியா செலவு (??) பண்ணி ஓட்டுக்கு நிக்கிறவனுக்கு நீங்க ஓட்டு போடும் போது கொஞ்சம் மறைவாக போட கூடாதா?? நீங்க ஒட்டுக்கு நிக்கிற நாதாரிங்க கூட்டத்துல ஒரு முடுச்சவிக்கு தான் நீங்க ஒட்டு போட முடியும்..  அட நீங்க ஓட்டுக்கு நிக்கிற எந்த நாதாரிக்கோ முடுச்சவிக்கிக்கோ ஒட்டு போடுங்க..ஏன்னா அது உங்க விருப்பம் அது உங்கள் அந்தரங்க விசயம் கூட. உங்கள் அந்தரங்கத்தை அடுத்தவன் எத்தி பார்க்கிறதை நீங்கள் அனுமதி அளிப்பீர்களா என்பது இந்த தான் வண்டு முருகனின் கேள்வி..

நீங்க ஓட்டு போடும் போது எடுக்கப்பட்ட படமோ அல்லது ஒட்டு போடுற மாதிரி போஸ் கொடுக்குற படமோ, உங்க விரலை கொஞ்சம் பாதுகாப்பா வச்சிருக்க கூடாதா? விரலை காட்டி காட்டி படம் நடிச்சு சம்பாதிச்ச நீங்க ,இப்போ அதே வெரலால கேவலப்பட்டு நிக்கிறீங்களே. இதுக்கு தான் அப்பவே சொன்னாங்களோ , வாள் எடுத்தவன் வாளால தான் சாவான்னு.

அது போக விலை வாசி ஏறிப்போச்சின்னு நீங்க உங்க சம்பளத்தை தான் கம்மியா வாங்குறீங்களா இல்லை பொது ஜனம் ஏற்கவனே விலைவாசியில கஷ்டபடுதுன்னு உங்க படத்தை ஓசியில காமிக்கிறீங்களா? எல்லாரும் நடிச்ச படத்தை விட உங்க படத்தோட டிக்கட் தான் காசு அதிகம் அது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? ரசிகனுக்கு ஒரு வேளை சோறு கூட போட முடியல உங்களால..

நீங்கள் எல்லாம் நல்ல வேளை அரசியலுக்கு வர வில்லை, வந்திருந்தால் அந்த கேப்டனையே மிஞ்சி இருப்பீங்க போங்க (காமடியில)!!