Monday, March 21, 2011

குடித்தவருக்கும், ஊத்தி கொடுத்தவருக்கும் உள்ள ஒற்றுமை.


  • ரெண்டு பேருக்கும் சொந்தமா பேச தெரியாது.
  • யாராவது எழுதி கொடுக்கிற அறிக்கையை வெளியிடுவாங்க.. சில நேரங்களில் அதை படிச்சும் பாப்பாங்க.
  • அவர்களை அழிப்போம்னு ஒரு வார்த்தையாவது அவங்களோட  அறிக்கைல இல்லாம இருக்காது.
  • அறிக்கை மட்டும் விடுவாங்க, போராட்டம் பண்ணுறது கட்சி காரன் மட்டும் தான், அதுவும் வீடியோ எடுத உடன் கலைஞ்சி போயிருவாங்க.
  • இவருக்கு தோழன் இப்ராகிம் ராவுத்தர் (இப்போ எங்கே இருக்காரோ) , அம்மாவுக்கு தோழி சசிகலா..
  • இவரு சூட்டிங் இல்லாம ப்ரீயா இருந்தா அறிக்கை விடுவாரு, அவங்க கோட நாடுல ஓய்வு எடுத்துட்டு இருந்தா அறிக்கை விடுவாங்க.
  • ரெண்டு பேரு பேருலையும் புரட்சி இருக்கு (என்ன புரட்சி செய்தாங்கண்ணு கேககாதீங்க ப்ளீஸ்)
  • MGR பேரு சொல்லாம கட்சி நடத்த முடியாது.
  • ரெண்டு பேரோட கட்சியிலையும் எம்.ஜி.யாரை ஏமாத்தினவங்க இருக்காங்க , பண்ட்ருட்டி இங்கே , அம்மா அங்கே.
  • பக்கத்து மாநிலத்துல பொறந்து , தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் உயிரயே(??) கொடுப்பாங்க.ரெண்டு பேருக்கும் தாய் மொழி தமிழ் கிடையாது.
  • அரசியல் வியாதியா நடிக்காம , நடிச்சு அரசியல்வியாதி ஆனாவங்க.
  • இவரு 2001 ல கலைமாமணி , அவங்க 1972 லேயே கலைமாமணி .
  • இவரு 2011 லேயும் , அவங்க 1991 லேயும் படிக்காமலேயே ரெண்டு பேரும் டாக்டர் பட்டம் வாங்கி இருக்காங்க.
  • ரெண்டு பேரும் சந்தன கடத்தல் மன்னனை புடிச்சி அழிச்சிருக்காங்க.. அவரு அழிச்சது வீரபத்திரனை, இவங்க அழிச்சது வீரப்பனை.
  • இவருக்கு கண்ணு மட்டும் சிவப்பு, அவங்களோ அப்படி ஒரு சிவப்பு.
  • மண்டபத்தை இடிச்சதுனால இவருக்கு கோபம், சட்டசபையில இவரை இடுச்சதுனால இவங்களுக்கு கோபம்.
  • இவர் பிரேமலதாவுக்கு அடங்கி போவாரு, இவங்க சசிகலாவுக்கு அடங்கி போவாங்க.
  • இவரு கட்சி காரங்களை  பச்சை பச்சையா தான் பேசுவாரு..இவங்க எப்ப்வுமே பசசை (கலரு கலரு) தான்.
  • இவருக்கு பேருல விஜயம் இருக்கு, அவங்களுக்கு பேருல ஜெயம் இருக்கு.
மொத்ததில இவங்க ரெண்டு பேரு கைல தான் தமிழ் நாட்டோட தலை விதியே இருக்கு.


பார்பனிய திமிர் பிடித்த தினமலர்(ம்)



Latest News







தி.மு.க.,வை திணறடித்த காங்., மேலிடம்: அரசியல் களத்தில் அரங்கேறிய அடேங்கப்பா பின்னணி


தி.மு.க.,வை காங்., காலில் விழவைத்த ஜெ., ராஜதந்திரம்!

காங்கிரசுக்கு 63 சீட் ஒதுக்க சம்மதித்தது தி.மு.க.,: நீண்ட கெஞ்சலுக்குப் பின் காங்., ஒப்புதல்


ஜப்பானை புரட்டி போட்டது; தி.மு.க.,வை கலங்கடித்தது

காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க., கைவிடாதது ஏன்? டில்லி சென்ற பின் ஞானோதயம்


நீங்க மேலே பார்த்து எல்லாம் தினமல(ம்) பத்திரிக்கையில்  தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த போது வந்த தலைப்புகள் மற்றும் வைகோவை கேவலப்படுத்தி வந்த தலைப்புகள்.


நீங்கள் கீழே பார்ப்பது அ.தி.மு.க தன்னிச்சையாக 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து அதனால் ஏற்பட்ட அனைத்து விதமான குழப்பங்களுக்கும் மிக சாதாரணமாக செய்தியை வெளி இடுவதற்க்கு அந்த பத்திரிக்கை இட்ட தலைப்பு.

அ.தி.மு.க., கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி: ம.தி.மு.க., - கம்யூ., கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி: 160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க., லிஸ்ட்

அ.தி.மு.க., அணியை உடைக்க திட்டம்: வேட்பாளர் அறிவிப்பு பின்னணியில் பரபரப்பு

அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் உடன்பாடு : அனைவரையும் சமாதானப்படுத்தினார் ஜெ.,

 
அந்த தலைப்பை இட்டது மட்டுமல்லாது அந்த பிரச்சினைக்கு அம்மா காரணம் இல்லைன்னு அவங்களே டிடக்டிவ் வச்சி பாத்து , பிரச்சினைக்கெல்லாம் சசிகலா குடும்பத்தை சார்ந்த மன்னார்குடி வகையறாக்கள் தான் காரணம் அப்படின்னு கழக கொ . ப. செ கணக்கா தன்னிலை விளக்கமும் கொடுத்திருக்கிறது இந்த தினமலம்.


இது பற்றி விசாரித்த போது, கூட்டணி கட்சி தொகுதி தவிர, மற்ற இடங்களுக்கான பட்டியலை ஜெயலலிதா தயாரித்தார்; பல தொகுதி, வேட்பாளர் பெயர்களை இரண்டு வாரங்களுக்கு முன்பே முடிவும் செய்துவிட்டார்; விருப்ப மனு தாக்கல், புகார்கள் அடிப்படையில் சில தொகுதிகளில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டாலும், இறுதிப் பட்டியலை ஜெயலலிதா தயாரித்து, திருப்தி அடைந்தார் என, தெரிந்தது. ஆனால், நேற்று முன்தினம் மாலை இப்பட்டியலை ஜெயலலிதா வெளியிடவில்லை; அவரது தோழி சசிகலா வெளியிட்டார். அப்பட்டியலில், சசிகலாவுக்கு வேண்டியவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
வெளியிடப்பட்ட 160 பேர் பட்டியலில், 70 முதல் 75 தொகுதிகள், சசிகலாவுக்கு சாதகமானவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. இதை நேற்று முன்தினம் மாலை, பட்டியல் அறிவிக்கப்படும் முன், கவனித்த ஜெ., பலரது பெயர், தொகுதி மாறியிருப்பது குறித்து அதிர்ச்சி அடைந்தார். மிகக் கோபமாக இது பற்றி ஜெ., கேட்டபோது, ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் தெரிவித்து, பட்டியலை மாற்ற இயலாதபடி, சசிகலா மற்றும் அவருடன் இருந்தவர்கள் பிடிவாதம் பிடித்தனர். ஒரு கட்டத்தில், "எப்படியும் செய்யுங்கள்' என, பட்டியலை தூக்கி வீசிவிட்டு ஜெயலலிதா தன் அறைக்கு சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து, தன் உதவியாளர் தவிர அவர், யாரையும் சந்திக்கவில்லை. கூட்டணி கட்சியினரின் அழைப்பு வந்த போது கூட, "இப்போதைக்கு பேச வாய்ப்பில்லை' எனக் கூறி ஜெயலலிதா தவிர்த்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள பட்டியல், சசிகலாவின் குழுமத்தினரை பலப்படுத்தும் வகையிலும், அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்தும் வகையிலும் இருப்பதாக, அ.தி.மு.க.,வினரே கருதுகின்றனர். பட்டியலும், தொகுதியும் மாற்றப்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே, கூட்டணி கட்சியினரிடையே ஏற்பட்ட அதிருப்தியும், நேற்று மதியம் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனால், கூட்டணியை திருப்திபடுத்தும் விதத்தில், தொகுதிப் பங்கீடு பற்றி ஜெயலலிதா விரைவில் முடிவு அறிவிப்பார் என, அ.தி.மு.க., பிரமுகர்கள் தெரிவித்தனர்.

  
  இந்த தினமலம் தி.மு.க கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த போது வைத்த தலைப்புக்கள். டமால், டுமீல்.

தி.மு.க கூட்டணியில் ஏதாவது ஏடாகூடம் நடக்காதா, அதை வைத்து நாலு நல்ல காசு பாக்கலாம்ணு காத்துகிட்டு இருந்தாலும் பரவாயில்லை.. வைகோ தேர்தலில் போட்டி இட மாட்டோமென்று அறிவித்ததற்கு அவரை "ஓட்டம்" என்று கேலி செய்து தனது பார்பன திமிரை காட்டி இருக்கிறது.. அவர் என்ன  தாலிகட்டிக் கொள்ள மேடையில் காத்திருந்த மணமகளை ஏமாற்றிவிட்டு ஓடிய மணமகன் மாதிரியான காரியத்தையா செய்தார்?   

பொண்ணு நடத்தை கெட்ட அடங்காபிடாரி, பஜாரியா இருக்காண்ணு தெரிஞ்சா என்ன பண்ணுறது?? மணமகன் தாலியை கட்டுவதற்குள் ஓடி விடுவது தானே நல்லது.

ஜெயலலிதா பொடா சட்டத்தில் தன்னை கைது செய்து சிறையில் அடைத்த போது...தினமலர் ஒரு செய்தி வெளியிட்டது..அதில் வைகோ பற்றிய பயோடேட்டாவும் ஒன்று..அதில் இவருக்கு பிடித்த உணவு அசைவம் என எழுதிவிட்டு அதன் கீழேயே,சிறையில் வாரம் இரண்டு முறை மட்டன் வழங்கப்படுகிறது ..வைகோவிற்கு பிரச்சனை இல்லை என நக்கலாக எழுதி இருந்தார்களாம்..அதை படித்துவிட்டு,சிறையில் இருந்த ஒன்றரை வருடகாலம் அசைவத்தை தொடாமலேயே இருந்திருக்கிறார் இந்த வைகோ.

தினமலர் இப்போது மட்டுமல்ல எப்போதுமே பார்பனியர்களை முன்னிலை படுத்துவதற்காக மீதி உள்ள அனைவரையும் கேவலமாக சித்தரிப்பதையே தொழிலாக செய்து வருகிறது. தினமலருக்கும் சரி, அரசியல் மாமாக்கள் சுப்புரமணிய சாமிக்கும் சரி, மொட்டை தலை  சோ(மாரி)க்கும் சரி இந்த தமிழர்களையோ, இலங்கை தமிழர்களையோ கண்டாலே ஆகாது. இவ்வளவு பேச்சு பேசும் சாமியும் , சோ(மாரி)யும் இலங்கை தமிழர்களை காப்பதற்கு இதுவரை ஒரு துரும்பை கூட நகர்த்தி போட்டது கிடையாது.. இந்த இருவரும் தான் இப்போதைக்கு அம்மாவை ஆட்டுவிக்கும் பார்ப்பனிய குல சூரர்கள். இவர்களின் பேச்சை கேட்டு தான் அம்மா எல்லா முடிவுகளையும் எடுக்கும்..இதற்காக இந்த தினமலமும் சேர்ந்து ஒத்தூதிக்கொண்டிருக்கிறது.

குலம் குலத்தோடு, மலம் மலத்தோடு.