Saturday, April 10, 2010

இது யாரும் சொல்லாத கதை

கி பி 1967 , நம்ம தமிழ் நாடு , தனி தமிழ் மாநிலமாக உருவான ஆண்டு...
அந்த தமிழ் நாட்டிலே பேரு வைக்காத ஒரு பசுமையான கிராமம் , அது தாங்க நம்ம பாரதிராஜா காமிரா open பண்ணினா வருமே அதே கிராமம்.அந்த கிராமத்தில ஒரு அழகான ஜோடி வாழ்ந்து வந்தாங்க .. அந்த நாயகன் ராணுவத்துல வேலை பாத்து கிட்டு இருந்தாரு.. வருசத்துக்கு ஒரு தடவை தான் ஊருக்கு வருவாரு நம்ம கதாநாயகன்..

ஊருக்கு வரும்போது நம்ம நாயகன் , தன்னோட அருமை மனைவிக்கு பரிசுகள் , நண்பர்களுக்கு மிலிடரி சரக்கு எல்லாமே வாங்கிட்டு தான் வருவாரு .. அவரு ஊருல இருக்குற நாட்கள் , ஊரே திருவிழா கோலம் பூத்திருக்கும் ..கையில் இருக்கும் காசு கரையும் வரை நண்பர்களுக்கு குறை இருக்காது.நம்ம நாயகனுக்கு காசை சேத்து வைக்க தெரியாது.. இதை வைத்தே வீட்டில் தினமும் சண்டை நடக்கும் ரெண்டு பேருக்கும்.

நம்ம் நாயகியும் எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை..அவளும் அவளுக்கு தேவையான எல்லா பொருட்களும் , எவ்வளவு காசாக இருந்தாலும் வாங்கி கொள்வாள்.முக்கியமாக அவளுக்கு தேவையான அழகு சாதனங்கள் வாங்கி வீட்டையே நிரப்பி விடுவாள்.தன்னால் முடியா விட்டாலும் , தகுதியை மீறி கடன உடன வாங்கியாவது ஆடம்படர சாதனங்களையும், அழகு சாதனங்களையும் வாங்கியே பெரும் கடனாளி ஆக ஆக்கி விட்டாள் நம்ம நாயகி.. ஆனா புருசன் தண்ணிக்காக நண்பர்களுக்கு செல்வு செய்தா மட்டும் ரொம்ப கோப படுவாள்.

கி பி, 1971 டிசெம்பர் மாதம்...

இந்தியாவுக்கும் , பாகிஸ்தானுக்கும் போர் மேகம் சூழ்ந்திருந்த நேரம்... போர் எப்போ வேணும்னாலும் வரலாம்.. ரெண்டு நாட்டு மக்களும் ஒரு வித பீதியிலேயே நாட்களை கடத்திக் கொண்டிருந்தனர்..

நம்ம நாயகன் விடுமுறை முடியவே இல்லை. அதற்குள்ளாகவே ராணுவ பணி இடத்திலிருந்து அவசர தந்தி வந்ததால் மனைவி மற்றும் நண்பர்களிடமிருந்து பிரியா விடை பெற்று அவசர அவசரமாக ரயில் பிடித்து இந்திய எல்லையை நோக்கி சென்றான் தன் தாய் மண்ணை காப்பதற்க்காக..

எல்லையில் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது..இரு நாட்டிலும் ஏகப்பட்ட உயிரிளப்புகளும், உடமை இளப்புகளுமாக போர் ரொம்ப கருவிக்ள் தன்னுடய திறமைகளல் கோர முகத்தை காட்டி கொண்டிருந்தது..

அந்த கொடிய தோட்டா ஒன்று நம்முடைய நாயகனை பதம் பார்த்து விட , அவன் நிலை குலைந்து மண்ணில் வீழ்ந்து விட்டான்.. அந்த தருவாயிலும் நம்மால் சொந்த நாட்டை காப்பாற்ற் முடிய வில்லயேன்னு கண்ணீர் விட்டு கொண்டிருந்த அவனுக்கு , அருமை மனைவியின் உருவமும் அவன் கண் முன்னே தோன்ற , எப்படியாவது எழுந்திருக்க முயர்ச்சி செய்தான்.. ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை இந்த உலகத்துக்கு விடை கொடுப்பதை தவிர ...

வீட்டில் முன் வாசலில் தபால் காரன் தந்தியுடன் நிர்ப்பதை பார்த்த உடனே அவளுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதை ஊகித்து விட்டாள்.. தபால் காரன் தந்தியை படிக்க ஆரம்பிப்பதற்குள்ளே அவள் சுய நினவை இழந்து கீழே விழுந்தாள்..இந்த செய்தியை கேட்ட உடனே அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி விட அவளுக்கு ஆறுதல் சொல்ல ஊரே வீட்டின் முன் கூடி விட்டது.ஒரு வாரம் கழித்து கணவனின் சடலமும் வந்து சேர்ந்தது..

எல்லாம் சடங்குகளும் முடிந்து உறவுக்காரர்களும், ஊர்காரர்களும் அவரவர் வேலையை பார்க்க போய் விட்டார்கள்..அவள் மட்டுமே தனியே அழுது கொண்டிருந்தாள்..தான் தனிமை பட்டு விட்டதை உணர்ந்தாள்.. எதிர்காலம எப்படி இருக்கும் என்று தெரிய வில்லை.. கையில் காசும் இல்லை.. ஊர் முழுக்க வாங்கி போட்ட கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் தடுமாறினாள்.. இருந்த கொஞ்சம் காசை வைத்து நாட்களை ஓட்டினாள்.. உறவினர்கள் யாரும் எந்த உதவியும் செய்ய வில்லை. அவளால் அவர்களிடம் பண உதவி கேட்க தன்மானம் இடம் கொடுக்க வில்லை. கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தார்கள்.. இருந்த ஒரே வீட்டை விற்று கடனை அடைத்து விட்டு ஊருக்கு வெளியே ஒரு குடிசை கட்டி அதில் குடியேறினாள்.

கையில் இருந்த சாதனங்களை எல்லாம் விற்று நாட்களை ஓட்ட தொடங்கினாள். உதவி செய்யவும் யாரும் இல்லை, குழந்தையும் இல்லை.. யாருக்காக வாழ வேண்டும் என்று தனிமையில் ஏங்கினாள். நாட்கள் உருண்டோடியது.. நாட்கள் மாதங்களாகின, மாதங்கள் வருடமாகின.. வருடங்கள் போக போக வறுமையின் உக்கிரமும் கூடி கொண்டே சென்றது..அவளும் கிழவியாகினாள்.

சரி , ஏதாவது தொழில் செய்தோ, பலகாரம் விற்றோ பிழைக்கலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.. இறுதியாக வடை சுட்டு பிழைக்கலாம் என்று நினைத்து கையில் வைத்திருந்த கொஞ்சம் காசை வைத்து வடை சட்டி, எண்ணை , கடலை பருப்பு மற்றும் தேவையான சாதனங்களை வாங்கினாள்..தனது குடிசை பக்கத்திலேயே அதற்கான ஒரு மரத்தடி நிழலையும் தேர்வு செய்து ஒரு நல்ல நாளை பார்த்து தனது தொழிலை ஆரம்பித்தாள்.

பய பக்தியுடன் வடை சுட ஆரம்பித்தாள்.. வடையும் சுட்டு முடிச்சிட்டு அதை விற்பதற்காக ஒரு பாத்திரத்தில் அடுக்கி கொண்டிருக்கும் நேரம் பார்த்து ஒரு வடையை ஒரு காக்கா தூக்கி கொண்டு ஓடி விட்டது.. கொஞசம் தூரம் வடையை வாயில் கவ்வி கொண்டு ஓடிய காக்கா ஒரு மரத்தில் போய் அமர்ந்தது. அந்த நேரம் பார்த்து அந்த வழியாக வந்த காக்காவின் நண்பனான ஒரு திருட்டு நரி அதை பார்த்து விட , எப்படியாவது அந்த காக்காவிடம் இருந்து அந்த வடையை பறிக்க ஆசை பட்டு ரூம் போட்டு யோசித்து கொண்டிருக்க ஒரு ஐடியா கிடைத்து விட நரிக்கு ஒரே சந்தோசம்.. அப்புறம் காக்காவை பார்த்து "காக்கா காக்கா உன்னோட பாட்டு கேட்டு ரொம்ப நாட்கள் ஆகி விட்டது.. எனக்கு நீ புதிதாக வந்த காக்க காக்க படத்தில் வரும் ஒ மகசீயா பாட்டு பாடேன் என்று கேட்க இன்னுமாட நம்மள இந்த ஊரு நம்பிக்கிட்டுருக்கு அப்படின்னு நினச்சு ஒ மகசீய அப்படின்னு ஆரம்பிக்க வடை கீழே விழுந்தது. அதை எதிர்பாத்த நரி வடையை எடுத்து விட்டு ஒடியதை கூட பார்க்கமல எல்லா வரியையும் பாடி முடிச்ச பிறகே தன் பாட்டை நிருத்தி விட்டு கீழே பார்க்க அங்கே நரியும் இல்லை , வாயில் இருந்த வடையும் இல்லை..அப்புறம் அந்த காக்கா சொல்லிச்சாம்..

"வடை போச்சே!"