Friday, April 2, 2010

இன்றைய மெகா சீரியல் எங்கே போய் கொண்டு இருக்கிறது

முறைப்பாடு , பில்லி சூனியம் , மூட நம்பிக்கை , கலாசார சீர்கேடு, கள்ள காதல்கள், குடும்ப சதி , பொறாமை இவைகளின் கூட்டு கலவையாக இன்றைய மெகா சீரியல்கள் போய் கொண்டு இருகின்றன.

வீட்டின் வரவேற்பறையில் குடும்பத்துடன் பார்க்க கூடிய அளவில் எந்த TV நிகழ்ச்சிகளுமே இல்லையே என்று ஏங்கும் அளவிற்கு தான் இன்றைய டிவிக்கள் மற்றும் அதன் நிகழ்ச்சிகள் .

பொதுவாக எந்த சீரியலுமே பாக்காத குடும்பஸ்தர்கள் எப்படியோ அந்த கருமங்களை பார்க்க கூடிய சூழ்நிலைக்கு தள்ள படுகிறார்கள். உபயம் : மனைவி .மற்றும் குடும்பம் ..

அப்படி தான் நானும் , நீங்களும் அந்த கன்றாவி சீரியல்களை பார்க்க வேண்டி இருக்கிறது .. பகல் முழுதும் சீரியல் , அத்துடன் நிறுத்தி கொண்டாலும் பரவாய் இல்லை .. நாம் பார்க்கும் நிலைமை இருக்காது .. ஆனால் பொழுது சாய்ந்தும் தீராத அந்த சீரியல்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது ...

அப்படி தான் நான் மாட்டி கொண்டு , SUN டிவி யில் செல்லமே பார்க்கும் பொன்னான (?) வாய்ப்பு எனக்கு கிடைத்தது ...

அதில் முறைப்பாடு அப்படின்னு ஒன்னு வைக்கிறாங்க நம்ம செல்லம்மாவோட அண்ணன் பொண்டாட்டி (அவங்க தாங்க நம்ம பழைய அண்ணி )...ஒரு சேவல் கோழிய சிலை முன் இருக்கும் அந்த சூலாயிதத்தில் குத்தி வச்சுடாங்க .. அப்படி குத்தி வச்சிட்டா அந்த ரெண்டு குடும்பமும் பிரிஞ்சி அவங்களுக்குள்ளே எந்த ஒட்டு , உறவும் இருக்க கூடாது ... அப்படி இருந்துட்ட சாமி குத்தம் ஆகி , யாருக்காவது ஏதாவது ஆகிடுமாம் ..

அப்படி முறைப்பாடு பண்ணிட்டதால நம்ம செல்லம்மா சொந்த வீட்ட விட்டு பிரிஞ்சு கான்டீன் நடத்துறாங்க .. அவங்க அப்பா அவங்க வீட்டுக்கு வந்தப்போ , நெஞ்சி வலி எடுத்து வலியிலே துடிச்ச பிறகும் அவங்க வீட்டுல இருந்து தண்ணி கொடுக்காம , பக்கத்துக்கு வீடுலேயிருந்து தண்ணி வாங்கி கொடுத்தாங்க ..

அப்படி முறைப்பாடு ங்கிற மூட பழக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து போய் கொண்டு இருகிறது அந்த செல்லமே தொடர்..

அது அப்படி இருக்க , வீட்டின் வரவேற்பறையில் இருந்து சைடு டிஷ் , பெப்சி சகிதம் வச்சி தண்ணி அடிச்சி கொண்டு இருக்கிறாள் இன்னொருத்தி .. கேட்டால் ஆம்பழைங்க செய்றது எல்லாமே அவங்க செய்வாங்களாம் .. இந்த கொடுமைகளை எங்கே போய் சொல்லுவது ..

இந்த சீரியல்களை பார்க்கும் எந்த குடும்ப பெண்களும் , அவர்களை போல மூட நம்பிக்கைகளுக்கும் , அடுத்தவன் புருஷனை அபகரிக்கும் எண்ணம் கொண்டவர்களாகவும் , தனக்கு வேண்டாதவர்களை எப்படி எல்லாம் சதி திட்டம் தீட்டலாம் என்றும் tution எடுக்காத குறையாக எல்லாத்தையும் செய்முறை விளக்கங்களுடன் காட்டும் இந்த சீரியல்களுக்கு அடிமையாக மாற மாட்டார்கள் ன்னு என்ன நிச்சயம் ..

இந்த டிவி க்களுக்கும் சென்சர் கட்டுபாடு மிகவும் தேவை படிகிற ஒன்று ..


நாம் முதலில் செய்ய வேண்டியது இந்த மெகா தொடர் டிவி சானல்களை கட் பண்ணி விடுவதுதான் (குடும்ப தலைவன் என்கிற அதிகாரம் இருந்தால்)

No comments: