Thursday, March 31, 2011

தேர்தல் களத்தில் சரியும் விஜயகாந்தின் விக்கெட்டுகள்!!


விக்கெட் # 1 : அண்ணாவின் ஆவி

பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றுதல் காரணமாக அண்ணா பெயர் கொண்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளேன். அண்ணாவின் ஆவி கூறியதால்தான், அவர் பெயரிலான கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளேன் என்றார் விஜயகாந்த்.

அண்ணாவின் ஆவி சொல்லிச்சு, அண்ணாவின் ஆயா சொல்லிச்சுன்னு எப்போ சொன்னாரோ அப்போதே ஒபனிங்க் விக்கெட் காலி.. ஆவியில இட்லி சுட்டு வியாபாரம் செஞ்சு பொழப்பு நடத்தும் முனியம்மாவையே நம்பலாம்.. ஆனா குடி போதையில ஆவிக்கிட்டே பேசிகிட்டு இருக்கும் மந்திரவாத சூனியக்காரர்களை எல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள், குறிப்பாக இஸ்லாமிய சமயத்தை சார்ந்தவர்கள் பெரும்பாலானோர் ஆவிகள் பேர் சொல்லி திரியும் பாவிகளை நம்புவதில்லை.

விக்கெட் # 2: வடிவேலு பிரச்சாரம்

எந்நேரமும் தண்ணியில மிதக்குறவன் பேரு இல்லை கேப்டன் என்பது போன்ற அரும்பெரும் கருத்துக்களை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க வடிவேலு செல்லுமிடமெல்லாம் ஏக ரெஸ்பான்ஸ் வாங்கி மக்களை சிந்திக்க வைத்திருக்கிறார் . இதனால் இவருடைய ரெண்டாவது விக்கெட் காலி.


வடிவேலுவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல போவதில்லை என்று சொன்ன விஜயகாந்த் , வடிவேலுவை இப்படியே பந்து வீச விட்டால் எல்லாரையும் க்ளீன் போல்ட் ஆக்கி விடுவார் என்று பயந்து வடிவேலுவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது மட்டுமின்றி , வடிவேலு பந்தை மட்டுமே எதிர்கொள்ள சிங்கமுத்துவை பேடு கட்டி அனுப்பி இருக்கிறார்கள்.


விக்கெட் # 3: (வேட்பாளரை) ஹிட் விக்கெட்

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதை அந்த வேட்பாளர் திருத்தியதால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்து உதைத்தார்.

 மக்களுக்கு சேவை (??) செய்வதர்காக பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் தன்னுடைய அடவடித்தனங்களையும், கை கால்களையும் குறைந்தது பொது இடங்களிலாவது அடக்கி வைக்க வேண்டும்.. அட நீங்க கதவை சாத்திகிட்டு பண்ருட்டிய எந்த மாதிரி திட்டினாலோ அல்லது மச்சான் சுதீஸை கட்டி வச்சி அடிச்சாலோ யாருக்கும் தெரியாது , யாரும் கேட்கவும் மாட்டார்கள்.. ஆனா பொது இடத்துல அதுவும் உங்க கட்சி வேட்பாளரையே கும்மு கும்முன்னு கும்முனா பொது ஜனத்துக்கு கண்டிப்பா உங்க மேல நல்ல ஒரு அபிப்ராயம் வராது..


விக்கெட் # 4: விருத்தாச்சலம் மக்கள்

நீங்க இந்த முறை விருத்தாச்சலத்தில் ஏன் போட்டி இடவில்லை என்று நிருபர்கள் கேட்டதற்க்கு அங்குள்ள மக்கள் சரி இல்லையென்று சொன்ன போது விழுந்தது நாலாவது விக்கெட்.

ஆட்டம் நடக்கும் போது பொதுவா பேட்ஸ்மேன் அவுட் ஆகுறதுக்கு ஏகப்பட்ட காரணம் இருக்கலாம் , ஆனா பார்வையாளார் (விருத்தாச்சலம் தொகுதி மக்கள்)  சரி இல்லைன்னு சொல்லுறது எல்லாம் ரொம்ப ஓவர். அதுபோல உங்களால் நிருபர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் ஒழுங்கா சிந்திச்சு பேச தெரியல!

 விக்கெட் # 5: சக (அ.தி.மு.க) வீரர்களிடம் சண்டை!

கூட்டணி கட்சின்னு நெனச்சி அ.தி.மு.க தொண்டர்கள் நீங்க பிரச்சாரம் பண்ண வந்த போது ஏதோ அவங்களோட கட்சி கொடியையும் சேர்த்து கொண்டு வந்திருக்காங்க.. ஆனா நீங்க அ.தி.மு.க ர.ர.க்களிடம் கொடியை இறக்குங்க இறக்குங்கன்னு சத்தம் போட்டு கத்தி இருக்கீங்க அதுவும் மைக்குல.கூட்டணி கட்சிகாரன் எப்படி உங்களுக்கு பிரச்சாரம் பண்ணுவான்.. அதுனால கழண்டது விக்கெட் நம்பர் 5.

மக்களிடமும் தெய்வத்துடனும் தான் கூட்டணின்னு சொன்ன காலம் மலையேறி போயி , இப்போதைக்கு தனியா நின்னா ரெண்டு பேராலையும் போனியாக முடியாதுன்னு நெனச்சு தானே ரெண்டு பேரும் சேந்து மட்டைய எடுதுட்டு வந்தீங்க.. அதுனால ஓட்டு வாங்கணும்னா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஓடுனா தானெய்யா ரன் கிடைக்கும்..நீங்க தனியா ஒரு பேட்டை மட்டும் வச்சிகிட்டு ஓடுனீங்கன்னா   எப்பிடி ரன்(ஓட்டு) கிடைக்கும்,
 
 விக்கெட் # 6:  முன்னுக்கு பின் முரணாக பேசி செய்யும் பிரச்சாரம்

பிரச்சாரம் செய்ய போகும் போது வாயில் வந்ததை எல்லாம் உளற கூடாது.. அப்படி தான் மகாபாரதத்துல ஒரு கதைன்னு ஆரம்பிச்சி , கதை என்னான்னு கூட தெரியாம உதவியாளர் கிட்டே புக்கை எடுத்து கேட்டு விட்டு ,, அந்த புக்கை ரெண்டு தடவை புரட்டி விட்டு அடுத்த பேச்சு பேச உங்க பாட்டுக்கு போயிட்டீங்க..மக்கள் அந்த கதை என்ன ஆச்சு என்ன ஆச்சுன்னு மண்டைய ஒடச்சதுதான் மிச்சம்.. உங்களுக்கே நல்ல தெரியும் உங்க பொது அறிவு கொஞ்சம் இல்ல ரொம்பவே வீக்குன்னு.. நீங்க பேசுறது உங்க்ளுக்கும் புரியல அதை கேக்குறவனுக்கும் புரியல.. விக்கெட் நம்பர் 6 காலி.

இப்புடியே உங்க மெயின் பேட்ஸ்மென் எல்லாம் காலி ஆகிட்டாங்க. இப்போதைக்கு இருக்கிறது டெயில் என்டர்ஸ் மட்டும் தான்.. அவங்களை மட்டும் வச்சு உங்களால அஞ்சு ரண்ணாவது எடுக்க முடியுமாங்கிறது தான் டவுட்டு.. ஆனா உங்க வெற்றி இலக்கோ டக்ளஸ் லூயிஸ் முறைப்படி 41 ரன்.. கரை சேருரது கொஞ்சம் கஸ்டம் தான்..


5 comments:

Anonymous said...

very funny narrations... I am a big fan of padithurai pandi ... keep going

Anonymous said...

Hilarious!!
Douglous louis or duckworth louis?

படித்துறை பாண்டி said...

டக்வொர்த் லூயிஸ் ஒரிஜினல்..ஆனா இவருக்கு நம்ம டாஸ்மாக் டக்லஸ் தான் கரக்ட்.  எப்புடி , நாங்களும் விளக்கம் கொடுப்போம்ல

படித்துறை பாண்டி said...

விக்கெட் # 7:

அரியலூரில் நேற்று முன் தினம் இரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜய்காந்த், நான் என் கட்சிக்காகத் தான் பிரச்சாரம் செய்ய வந்தேன். அதிமுகவுக்கு பிரசசாரம் செய்ய வரலை என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாமக்கோடங்கி said...

ஆஹா.. கலிஞறு வீல் சேருல உக்காந்த மேனிக்கே ஓட்டிட்டு வந்து பால போட்டு சென்டர் ஸ்டம்ப தூக்கிடுவாறேபா... அப்ப கப்பு போச்சா.. கேப்டன் தண்ணி போட்டுட்டு வேற தன்னோட கேச்ச தானே புடிக்கிறாரு நைனா....