முதல்லே நம்ம (தறு)தலயோட அசல் படம்.
ஆக்ஷன் படம் என்றாலும் அஜித்தின் அசல் குடும்ப கதைதான்! ஆமாம் பின்னே., சொத்துக்காக அஜித்தை கொல்லத்துடிக்கும் அவரது அண்ணன் - தம்பிகளின் ஆக்ஷனும், அதற்கு இவரது ரீயாக்ஷனும்தான் படம் என்றால் அசல் குடும்ப கதைதானே?.முதல் , இரண்டாம் தாரம் மகன்ளுக்குள் நடக்கும் சொத்து தகராறே கதை...இந்த சொத்து தகராறை சொல்ல பிரான்ஸ் வரை போயி தயாரிப்பாளரையும் கஷ்ட படுத்தி , நம்மளையும் கஷ்ட படுத்தியிருகிராய்ங்க இந்த பய புள்ளைங்க..
அப்புறம் நம்ம ஜோசெப் விஜயோட சுறா (புட்டுகிச்சு) படம்.
எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா... நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.
யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.
இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.(நன்றி தட்ஸ்தமிழ்)
இந்த படத்தை விஜய் மட்டும் நடிச்சிருந்தாலும் பரவாயில்லை. ஆன இந்த சன் பிச்சர்ஸ் அந்த படத்தை வாங்கின ஒரே காரணத்தினால டிவியிலே வேற ஒரு நிகழ்ச்சியும் பாக்க முடியல..அஞ்சு நிமிஷதுக்கு ஒரு தடவை கடலில் கிடக்கும் அந்த சுறா ட்ரைலர் செய்யும் அநியாயத்துக்கு சுனாமியே பரவாயில்லைண்ணு தோணுது.
நல்ல வேளை , அசல் படத்தை சன் பிச்சர்ஸ் வாங்கல..இல்லைண்ணா அவங்களும் அவங்களோட அசல் முகத்தை காட்டி நம்மள கொலயா கொன்னுருப்பாயிங்க .
நோகாம நொங்கு திங்கிற இந்த சன் பிக்சர்ஸ், யாரு படத்துல நடிச்சிருந்தாலும் பரவாயில்லை, யாரு இயக்குனாலும் பரவாயில்லை , சன் டிவியை வச்சே படத்தை ஓட்டி விடலாங்கிற தையிரியத்தினால கஷ்ட படுறது என்னவோ காசு கொடுத்து செட் அப் பாக்ஸ் வாங்கி வச்சிருக்கிற பொது ஜனம் உன்னை போல் ஒருவன்.
தமிழ் திரையுலகை அழிக்கிறவங்க இன்னும் நிறைய பேரு இருந்தாலும் , இந்த மூன்று பேரால தான் அழிவு மிகப்பலமா இருக்கு..
அதுனால இந்த திரையுலகை காப்பாற்ற இந்த மூன்று பேரும் முன் வர வேண்டும்..
அஜித் குமார் அவர்கள் பேசாம ரேஸ் பக்கம் போயி அதிலே மட்டும் கவனம் செலுத்தினாருண்ணா , இப்போ ரேஸ்ல 18ஆம் இடதுக்கு வந்த அவரால , எதோ 17 ஆவது இடத்துக்கு வந்த மாதிரியும் இருக்கும், தமிழ் திரை ரசிகர்களும் பிழச்சுக்குவாங்க.
நம்ம ஜோசெப் விஜய் அவர்கள், இனிமே படமே நடிக்காம, பேசாம கட்டி வச்கிருகிற மண்டபங்களுக்கும், கடைகளுக்கும் வாடகை வசூல் பண்ணினாலே போதும்.. தயவு செஞ்சு அரசியல் பக்கம் வந்து இங்கேயும் ஒரு குத்தாட்டமும் , நெஞ்செ இல்லாம பஞ்ச் டயலாக் பேசாமலும் இருந்தாலே அவருக்கு கோடி புண்ணியமா போகும்.
நம்ம சன் டீவி பேசாம , படம் தயாரிக்கிறத (மன்னிக்கவும் , புடிங்கி விக்கிறத) விட்டுட்டு ,படத்தை ரிலீஸ் பண்ணின அடுத்த நிமிஷமே வெற்றி நடை போடுகிறதுண்ணு இம்சையை குடுக்காம, எதோ நித்தியானந்தா போல் மற்றும் சில ஆனந்தாக்களின் படங்களை மட்டும் அப்பப்போ ஒளி பரப்பினாங்கன்னா எதோ அவஙக TRB ரேட்ட்டிங் ஏறின மாதிரியும் இருக்கும்.நம்மள காப்பாத்தின மாதிரியும் இருக்கும்.நமக்கும் வெளி உலகத்தில நடக்கிற ஆன வெளி உலகத்துக்கு தெரியாம நடக்கிற விசயத்தை பாத்து ஜொள்ளு விட்ட மாதிரியும் இருக்கும்.
நம்மையும் , இந்த தமிழ் திரையுலகையும் காப்பாற்ற் முன் வருவார்களா இந்த மூன்று பேரும்.. அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இவர்களை திருத்த ஒராயிரம் "தமிழ்ப்படம்" வந்தாலும் முடியாது.
Saturday, May 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஒன்னு சொல்லுறேன், நல்லா கேட்டுகொங்கே மக்களே. இந்த உலகம் அழியபோகுது, அதனோட அறிகுறிதான் இதல்லாம்.
நம்ம மக்களை எத்தனை முறை அடித்தாலும் திருந்தமாட்டார்கள். அப்படியே லூசுல விடுங்க.
நமக்கு இருக்கவே இருக்கு ப்ரீ கலர் டிவி, மானாட மயிலடா, etc, etc.
Post a Comment