Sunday, March 20, 2011

தேர்தல் ஆணையத்தின் கேணைத்தனம்.

இந்த தேர்தல் வந்தாலும் வந்துச்சு.. இந்த தேர்தல் ஆணையத்தோட அக்கப்போர் தாங்க முடியல..

தெரியாம தான் கேக்குறேன்.. இவ்வளவு நாளும் சும்மா இருந்துட்டு , தேர்தல் அறிவிச்ச உடனே தான் கட்சி காரங்க கட்டு கட்டா காசு எடுத்துட்டு போவாங்களா?? அப்படி எடுத்துட்டு போனா அவங்கள மாதிரி கேணபயலுக ஊருலேயே இருக்க மாட்டாங்க. காசு எடுத்துட்டு போனா அவங்கள மடக்கி  புடிக்க ரெடியா இருக்காங்க இந்த ஆணைய பைத்தியக்காரபயபுள்ளைங்க!

இந்த டிசம்பர் ஆறு அன்னைக்கு ரெயில் , பஸ்ல ஏறி பயணிங்களோட பொட்டிய தொறந்து அவங்க வச்சிருக்கிற அண்டர்வேரை வரைக்கும் அவுத்து பாத்துட்டு ஒண்ணும் இல்லைண்ணு போவாங்களே அது மாதிரி.. குண்டு வைக்கணும்ணா டிசம்பர் ஆறு அன்னிக்கு வச்சா தான் வெடிக்குமா , அதுக்கு முன்னாடி வச்சா ஒண்ணும் பிரச்சினை இல்ல்லயா??


ஆனா இதுல கஷ்டபடுரவைங்க யாருன்னா அப்பாவி வியாபாரிங்க தான். ஒரு லட்சம் ரூபாயியும், பத்து புடவையும் வச்சிருந்தாலே அவங்கள புடிச்சி கேள்வி மேல கேள்வி கேட்டு கொலையா கொல்லுராயிங்க.. இப்போ  ஒரு லட்ச ரூபாயிங்கிறது எல்லாம் ஒரு காசா ?

நம்ம நாட்டுல உள்ள எந்த ஆணையமா இருந்தாலும் சரி, ஆட்சியாளர்களா இருந்தாலும் சரி, அவங்களோட எந்த சட்ட திட்டமும் வச்சா குடிமி, செரச்சா மொட்டை அப்படிங்கிற மாதிரி தான் இருக்கு. ஓவரா கன்ட்ரோல் பண்ணுரேன் பேர்வழின்னு டார்ச்சர் கொடுப்பாங்க , அப்படி இல்லைன்னா எதுவுமே கண்டுக்க மாட்டாங்க..

வாக்காளனுக்கு கொடுக்கப்பட வேண்டிய காசு எப்பவோ அந்தந்த ஊரு போயி சேந்துருக்கும்.. எடுத்து கொடுக்குறது ஒண்ணும் தான் பாக்கி.. இவங்க என்னன்னா இப்ப தான் தூங்கி எழுச்சி வந்த மாதிரி செக்கப் பண்ணுறாங்க.
இவங்க தொந்தரவுனால பத்து கிலோ அரிசி மொத்தமா எடுத்து போக முடியல.. ஒரு லட்ச ரூபாய் எடுத்து போக முடியல.. லாண்ட்ரி கடையில மொத்தமா அஞ்சு புடவை துவைக்க கொடுத்தனுப்ப முடியல.பத்து பத்திரம் வாங்கி எடுத்துட்டு போக முடியல.. இந்த தேர்தல் ஆணைய பயபுள்ளைங்க கிட்ட யாராச்சும் உண்மை என்னான்னு சொன்னா பரவாயில்லை.


வாகன சோதனையில் பணம் பறிமுதல்: தேர்தல் கமிஷன் நடவடிக்கையால் வியாபாரிகள் பாதிப்பு; வெள்ளையன் அறிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை தலைவர் வெள்ளையன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சட்டமன்ற தேர்தலில் பணம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கைகள் வேதனைக்குரியது. இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியிடமிருந்தும் பணம் கைப்பற்றப்பட வில்லை. தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் இந்த நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வணிகர்களே! கொள்முதலுக்காக வணிகர்கள் எடுத்துச்செல்லும் பணம் கைப்பற்றப்படுவதும் உரிய ஆவணங்கள் கேட்பதும் அதனால் ஏற்படும் காலதாமதமும் வழக்கமான வியாபார நடவடிக்கைகளை முடக்கி விட்டது.
வியாபாரத்துக்காக கொள்முதல் செய்து ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லப்படும் அரிசி மூட்டைகள், நகைகள், நெல் மூட்டைகள், ஜவுளி வகைகள் போன்றவற்றைக் கூட கைப்பற்றி தேவையில்லாத கெடுபிடிகளை செய்து வியாபாரிகளை தொல்லைக்கு உள்ளாக்குகின்றனர். பணம் அல்லது பொருட்கள் எடுத்துச்செல்லும் வணிகர்கள் என்ன விதி முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உடனடியாக தெளிவாக அறிவிக்க வேண்டும்.
இதுவரை கைப்பற்றப்பட்டிருக்கும் பணம் அல்லது பொருட்களை உரியவர்களிடம் உடனடியாகத் திருப்பி கொடுத்து விடவேண்டும். வாகன சோதனை அரசியல்வாதிகளை குறி வைத்து நடத்தப்பட வேண்டும். ஒரே கட்சியைச் சேர்ந்த பல வேட்பாளர்களிடம் ஓட்டுக்குப்பணம் கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யவேண்டும். இல்லையேல் தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்றாகி விடும்.
வணிகர்கள் மீதான இந்த நடவடிக்கை தொடர்ந்தால் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் போராடுவதைத் தவிர வேறுவழி இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த தேர்தல் ஆணைய பயபுள்ளைங்க கிட்ட யாராச்சும் உண்மை என்னான்னு சொன்னா பரவாயில்லை.


3 comments:

ராஜ நடராஜன் said...

உங்களுக்கு கூட்டா இன்னும் நாலு பேர் சேர்ந்துகிட்டா அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம்தான்.

பணமாற்று முறைகள் வங்கிகள் சார்ந்ததாய் இருக்க வேண்டும்.மஞ்சப்பையில் சுருட்டி வைத்துக்கொள்ளும் போதே கறுப்பு பணத்தின் அடையாளங்கள் துவங்கி விடுகின்றன.

பாலா said...

ஒரு படத்துல விவேக் சொல்வாரே, என்னை எல்லாம் கரெக்டா புடிங்க. ஆனா திருடன மட்டும் விட்டுடுங்கன்னு. அது மாதிரிதான் நடக்கிறது.

Anonymous said...

தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஆடு, கோழிகளை கூட விட்டு வைக்க வில்லை. வாக்காளர்களுக்கு பிரியாணி போடுவதற்காக மொத்தமாக கொண்டு போவதாகக் கூறி ஆடுகளையும், கோழிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். விற்பனைக்காக எடுத்துச் செல்லும் கொலுசுகளையும், நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். மதுரையில் ஒரு அரசியல் கட்சியினரின் வெங்காய குடோனில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனை நடத்தினார்கள். வெளியூர் தொண்டர்களை தங்க விடாமல் செய்ய திருமண மண்டபங்களையும் பூட்டி சாவியை அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொண்டனர்.